Sat. Jan 18th, 2025
Spread the love

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவிக்கு ஒன்றிய அரசு, பத்மவிபூஷண் விருதை அறிவித்துள்ளது. இதற்காக அவருக்கு திரையுலகை சேர்ந்த பலரும் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமாரோ, ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்கே அவரை வாழ்த்த நேரில் வந்துவிட்டார். அவரை பார்த்ததும் நெகிழ்ந்துபோன சிரஞ்சீவி, அவரை ஆரத்தழுவி வரவேற்றார். இருவரும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர், சிரஞ்சீவி வீட்டில் தயாரான தடபுடல் விருந்து சிவராஜ்குமாருக்காக பரிமாறப்பட்டது. சிரஞ்சீவியும் சிவராஜ்குமாரும் சேர்ந்து அந்த அறுசுவை உணவுகளை ருசித்து சாப்பிட்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் வைரல் ஆகி வருகிறது.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *