Fri. Jan 17th, 2025
Spread the love

நடிகை ராதிகா சரத்குமார், தன்னுடைய ராடான் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சித்தி, செல்வி, அரசி, வாணி ரானி உள்ளிட்ட பல ஹிட் சீரியல்களை கொடுத்துள்ளார். தவிர்க்க முடியாத காரணங்களால் சித்தி-2 சீரியலை விட்டு பாதியிலேயே விலகினார். அதன்பின் கலைஞர் மற்றும் விஜய் டிவியில் சில சீரியல்களை தயாரிக்க ஆரம்பித்தார்.

இந்நிலையில் அவர் தற்போது புதுப்பொலிவுடன் ஹெச்டி தரத்தில் மீண்டு வந்திருக்கும் பொதிகை தொலைக்காட்சிக்காக ’தாயம்மா குடும்பத்தார்’ என்ற புதிய தொடரை தயாரித்து நடிக்கிறார். மேலும், இதில் சந்திரமுகி படத்திலும், குழந்தை நட்சத்திரமாக நடித்த பிரகர்ஷிதா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள தாயம்மா குடும்பத்தார் சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *