Fri. Jan 17th, 2025
Spread the love

 ‘டிக்டாக்’ மூலம் பிரபலமாகி, பிறகு திரைப்பட நடிகையாக மாறியவர் சசி லயா. இலங்கையைச் சேர்ந்த இவர், தற்போது டி.வி தொடர்களில் நடித்து வருகிறார்.  செல்வராகவன் நடித்த ‘பகாசூரன்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘மீனாட்சி பொண்ணுங்க’ தொடரில் கதாநாயகனின் அம்மாவாக நடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்த்தி ராவ் என்ற நடிகையுடன் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது ஆர்த்தி ராவுக்கு ஒதுக்கப்பட்ட நாற்காலியில் சசி லயா அமர்ந்துள்ளார். அந்த நாற்காலி தன்னுடையது என்றும், வேறு இடத்தில் உட்காரும்படியும் சசி லயாவிடம் ஆர்த்தி ராவ் சொல்லியிருக்கிறார்.  இதுதொடர்பாக இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு, பிறகு குடுமிபிடி சண்டையாக மாறி உள்ளது.  இதனால் கோபமடைந்த ஆர்த்தி ராவ் சசி லயாவை அடித்ததாகவும், பதிலுக்கு சசி லயா ஆர்த்தி ராவை திருப்பி அடித்ததாகவும் கூறப்படுகிறது.  இந்நிலமை விபரீதமாவதை அறிந்த டி.வி தொடர் இயக்குனர், உடனே இருவரையும் சமாதானப்படுத்தினார். இச்சம்பவம் டி.வி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *