Fri. Jan 17th, 2025
Spread the love

கடந்த 1990ம் ஆண்டு பிரபல இயக்குநர் இராம.நாராயணன் இயக்கத்தில் சீதா, நிழல்கள் ரவி, நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பக்திப் படம், ‘ஆடிவெள்ளி’. இதில் சந்திரசேகர், அருணா, வெ.ஆ.மூர்த்தி, ஒய்.விஜயா, ரா.சங்கரன், பிரதீப் சக்தி, குள்ளமணி ஆகியோரும் நடித்திருந்தனர். இப்படத்தில் யானையும், பாம்பும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தன. ‘வெள்ளிக்கிழமை ராமசாமி வர்றான்டா’ என்ற பாடலும், வெள்ளிக்கிழமை ராமசாமி என்ற பெயர் கொண்ட யானையின் சேட்டைகளும் அன்றைய ரசிகர்களைப் பெரிதும் உற்சாகப்படுத்தி மகிழ்வித்தன. இப்படம் வெளியாகி 34 வருடங்கள் ஆன நிலையில், தற்போது ‘ஆடிவெள்ளி’ படம் ரீமேக் செய்யப்படுகிறது. இதுகுறித்து இராம.நாராயணனின் மகனும், தயாரிப்பாளருமான முரளி ராமசாமி கூறுகையில், ‘இன்றைய காலத்துக்கும், டெக்னாலஜிக்கும், ட்ரெண்டுக்கும் ஏற்ப ‘ஆடிவெள்ளி’ படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளோம். கிராஃபிக்ஸ் பணிகளில் நிபுணத்துவம் பெற்ற இயக்குனரை தேர்வு செய்ய உள்ளோம். இதில் நயன்தாரா நடித்தால் சிறப்பாக இருக்கும்’ என்றார்.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *